கொட்டகலையில் சிறுத்தையின் உடல் மீட்பு 

by Staff Writer 16-02-2019 | 3:53 PM
Colombo (News 1st) திம்புள்ள பத்தனை - கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தையின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் உடல் நல்லதண்ணி வனஜீவராசி தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சுமார் 5 அடி நீளமான சிறுத்தையின் உடலே மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். மிக நீண்ட காலமாக ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்டதுடன், தோட்டத்தொழிலாளர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.