அர்ஜூன மகேந்திரனையும் மதுஷையும் அரசாங்கம் பாதுகாக்கிறதா: நாமல் ராஜபக்ஸ சந்தேகம்

by Bella Dalima 16-02-2019 | 8:18 PM
Colombo (News 1st) அர்ஜூன மகேந்திரனையும் மதுஷ் எனப்படும் பாதாளக் குழு நபரையும் அரசாங்கம் ஒரே விதமாகப் பார்ப்பதாகவும் இருவருக்கு எதிராகவும் சிவப்பு அறிவித்தல் பெறாது பொலிஸார் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். குறித்த இருவரின் பாதுகாப்பின் பின்னணியில் அரசாங்கம் உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். குடு வங்கியை தன்வசம் வைத்திருக்கும் மதுஷையும் மத்திய வங்கியை கொள்ளையிட்ட அர்ஜூன மகேந்திரனையும் எவ்வாறு ஒரே விதமாகப் பார்ப்பது என்ற பிரச்சினையுள்ளதாக நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தங்காலை தொகுதிக்கான சங்க சபை அங்குரார்ப்பண நிகழ்வின் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். நேற்று (15) நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.