வட மாகாணத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு

வட மாகாணத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு

வட மாகாணத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2019 | 4:16 pm

Colombo (News 1st) வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்தது.

வெள்ளத்தினால் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாக சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துக வீரசிங்க குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (14) இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுமார் 11,000 விவசாயிகள் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பந்துக வீரசிங்க குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதற்கு 400 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 8,000 ஏக்கர் செய்கை நிலங்களுக்கு இன்று இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்