விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட மாட்டாது 

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட மாட்டாது 

by Staff Writer 15-02-2019 | 3:23 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்காள்ளும் திகதி எக்காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. www.doenets.lk  என்ற இணையத்தள முகவரியின் ஊடாக விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இம்முறை உயர்தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் நடைபெறவுள்ளது.