by Staff Writer 15-02-2019 | 8:15 PM
Colombo (News 1st) அறுவைக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் கொழும்பு முகத்திடலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
''கிளீன் புத்தளம்'' அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, குறித்த ஒரு கட்சிக்கு மாத்திரமே உரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகத் தெரிவித்து அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை, அறுவைக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன், மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.