ஈரானில் தற்கொலைத் தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு

ஈரானில் தற்கொலைத் தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 14-02-2019 | 9:05 AM
Colombo (News 1st) ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, சிஸ்டான் பலூசிஸ்தான் மாகாணத்தில் படையினர் போக்குவரத்து பஸ்ஸை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு, சன்னி இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு மற்றும் ஜெய்ஸ் அல் அட்ல் ஆகியன பொறுப்பேற்றுள்ளன.