சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 22 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 22 பேர் சியம்பலாண்டுவயில் கைது

by Staff Writer 14-02-2019 | 4:07 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 22 பேர் சியம்பலாண்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் திஸ்ஸமஹாராம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் இரண்டு வாகனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்