SSC வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் யாருடையது?

by Staff Writer 13-02-2019 | 9:29 PM
Colombo (News 1st) கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று ஆறு மாதங்களின் பின்னர் SSC வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப் வாகனங்கள் சில கிரிக்கெட் நிறுவன வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்றைய தினம் (12) SSC வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என ​தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் குறித்த வாகனத்தை பயன்படுத்தியது யார் என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.