கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் திறக்கப்படவுள்ளது

கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி

by Bella Dalima 13-02-2019 | 6:00 PM
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களை மீள திறக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் மொரிசனின் கெடுபிடியான கொள்கை தளர்த்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, கிறிஸ்துமஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களை மீளத்திறப்பதற்கு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுமதியளித்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.