by Staff Writer 12-02-2019 | 8:31 PM
Colombo (News 1st) வானொலி அரச விருது விழாவில் சக்தி.எவ்.எம்., மற்றும் நியூஸ்பெர்ஸ்ட் 11 விருதுகளை சுவீகரித்துள்ளன.
2019 - வானொலி அரச விருது விழா கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித பிரேமதாச தலைமையில் இந்த விருது வழங்கல் விழா நடைபெற்றது.
இதன்போது,
* சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருது - சக்தி எப்.எம்., நியூஸ்பெர்ஸ்ட்டின் இராசலிங்கம் ரவிரகு
* சிறந்த வானொலி நாடக பிரதியாளர் விருது - சக்தி எப்.எம். அலைவரிசை பிரதானி ஆர்.பி. அபர்ணாசுதன்
* சிறந்த வானொலி வினாவிடை நிகழ்ச்சிக்கான விருது - ஞானகுமாரன் கணாதீபன்
* சிறந்த வானொலி ஆவணப்படுத்தல் நிகழ்ச்சிக்கான விருது - சக்தி எப்.எம். இன் முகாமையாளர் ஞானகுமாரன் கணாதீபன்
* சிறந்த ஆரம்ப விளம்பர குறியிசைக்கான விருது - சக்தி எப்.எம். இன் இசைக்கட்டுப்பாட்டாளர் கனகராசா மயூரன்
* சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது - ஆரணி பரமசாமி
* ஆண்டின் சிறந்த பெண் அறிவிப்பாளர் விருது - வனிதா பரமேஸ்வரன்
* சிறந்த வானொலி சஞ்சிகை நிகழ்ச்சி ஜுரி விசேட விருது - வனிதா பரமேஸ்வரன்
* சிறந்த வானொலி நடிகருக்கான விருது - பாக்கியராஜா கீர்த்தனன்
* சிறந்த வானொலி நாடக தயாரிப்பாளர் விருது - சக்தி எப்.எம் தயாரிப்பு உதவி முகாமையாளர் வேள் பிரஜீவ்
ஆகியோருக்குக் கிடைத்தன.
இதேவேளை,
* சிறந்த சிங்கள புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருது -நியூஸ்பெர்ஸ்ட்டின் சுரேன் சஞ்சய பெரேரா
''ஜனதா ஹண்ட'' தொகுப்பிற்காகவே நியூஸ்பெஸ்டின் சுரேன் சஞ்சய பெரேரா இந்த விருதுக்குப் பாத்திரமானார்.
இந்தநிலையில், வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் 'பிரதீபா பிரணாம விருது' கலாநிதி அருந்ததி ஶ்ரீறங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.