விருதுகளைக் குவித்த சக்தி FM

வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

by Staff Writer 12-02-2019 | 8:31 PM
Colombo (News 1st) வானொலி அரச விருது விழாவில் சக்தி.எவ்.எம்., மற்றும் நியூஸ்பெர்ஸ்ட் 11 விருதுகளை சுவீகரித்துள்ளன. 2019 - வானொலி அரச விருது விழா கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித பிரேமதாச தலைமையில் இந்த விருது வழங்கல் விழா நடைபெற்றது. இதன்போது, * சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருது - சக்தி எப்.எம்., நியூஸ்பெர்ஸ்ட்டின் இராசலிங்கம் ரவிரகு   * சிறந்த வானொலி நாடக பிரதியாளர் விருது - சக்தி எப்.எம். அலைவரிசை பிரதானி ஆர்.பி. அபர்ணாசுதன் * சிறந்த வானொலி வினாவிடை நிகழ்ச்சிக்கான விருது - ஞானகுமாரன் கணாதீபன் * சிறந்த வானொலி ஆவணப்படுத்தல் நிகழ்ச்சிக்கான விருது - சக்தி எப்.எம். இன் முகாமையாளர் ஞானகுமாரன் கணாதீபன் * சிறந்த ஆரம்ப விளம்பர குறியிசைக்கான விருது - சக்தி எப்.எம். இன் இசைக்கட்டுப்பாட்டாளர் கனகராசா மயூரன் * சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது - ஆரணி பரமசாமி * ஆண்டின் சிறந்த பெண் அறிவிப்பாளர் விருது - வனிதா பரமேஸ்வரன் * சிறந்த வானொலி சஞ்சிகை நிகழ்ச்சி ஜுரி விசேட விருது - வனிதா பரமேஸ்வரன் * சிறந்த வானொலி நடிகருக்கான விருது - பாக்கியராஜா கீர்த்தனன் * சிறந்த வானொலி நாடக தயாரிப்பாளர் விருது - சக்தி எப்.எம் தயாரிப்பு உதவி முகாமையாளர் வேள் பிரஜீவ் ஆகியோருக்குக் கிடைத்தன. இதேவேளை, * சிறந்த சிங்கள புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருது -நியூஸ்பெர்ஸ்ட்டின் சுரேன் சஞ்சய பெரேரா ''ஜனதா ஹண்ட'' தொகுப்பிற்காகவே நியூஸ்பெஸ்டின் சுரேன் சஞ்சய பெரேரா இந்த விருதுக்குப் பாத்திரமானார். இந்தநிலையில், வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் 'பிரதீபா பிரணாம விருது' கலாநிதி அருந்ததி ஶ்ரீறங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.