எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

by Staff Writer 12-02-2019 | 7:34 AM
Colombo (News 1st) எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டமைக்கு இணங்க, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் ஒட்டோ டீசலின் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. புதிய விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.