புதுடில்லி ஹோட்டலில் பாரிய தீ: 15 பேர் உயிரிழப்பு

புதுடில்லி ஹோட்டல் தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

by Staff Writer 12-02-2019 | 10:08 AM
Colombo (News 1st) இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 15 பேர் பலியானதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டில்லியில், கரோல் பாக் பகுதியிலுள்ள அர்பித் பெலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 4.35 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.