175 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானம்

175 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானம்

by Staff Writer 11-02-2019 | 8:50 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 175 பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பாலங்கள், 37.7 ஸ்ரேலின் பவுன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன. குறித்த பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் பிரித்தானிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி தேசிய அபிவிருத்திக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.