மரமுந்திரிகை, மரக்கறிசெய்கையை மேம்படுத்த நடவடிக்கை

மட்டக்களப்பில் மரமுந்திரிகை, மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 11-02-2019 | 4:03 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடையை, மாவட்டத்திற்குள்ளேயே விற்பனை செய்வதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. மேலதிக அறுவடைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.