தனமல்வில சம்பவத்திற்கு மூன்று குழுக்கள் களத்தில்

தனமல்வில சம்பவத்திற்கு மூன்று குழுக்கள் களத்தில்

by Fazlullah Mubarak 11-02-2019 | 9:01 AM

Colombo (News 1st) தனமல்வில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகளுக்கு 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்திலிருந்த சீ.சீ.ரி.வி. கெமராவில் பதிவாகிய காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனமல்வில பகுதியில் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 22 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இரண்டு மோட்டார் சைக்கில்களில் பயணித்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர், பிணை வழங்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.