by Staff Writer 10-02-2019 | 10:05 AM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஓலுமரா' என்றழைக்கப்படும் சானுக்க மதுஷான் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ - சிரிகம்பள பகுதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த சந்தேகநபர்கள், நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓலுமரா என்ற சந்தேகநபர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (10) மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.