மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff Writer 10-02-2019 | 1:19 PM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படும் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 40 பேரும் இன்று (10) துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 31 பேரின் குருதி மாதிரிகளில் போதைப்பொருள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களில் இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னணி போதைப்பொருள் கடத்தற்காரர்கள் ஐவர் அடங்குவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் இதில் அடங்குகின்றார்.