படைப்புழுவை ஒழிப்பது குறித்த விசேட பேச்சுவார்த்தை

படைப்புழுவை ஒழிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை

by Staff Writer 10-02-2019 | 7:38 AM
Colombo (News 1st) படைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (10) விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. கன்னொருவ தேசிய விவசாய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிலையத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில், பிரதேச மட்டத்தில் படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கிடைத்துள்ள தரவுகள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி எம் டப்ள்யூ வீரகோன் தெரிவித்துள்ளார். இதனைத்தவிர, சிறுபோகத்தின்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் விவசாயிகளுக்குத் தௌிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.