தனமல்விலவை சூடாக்கிய துப்பாக்கிச்சூடு

தனமல்விலவை சூடாக்கிய துப்பாக்கிச்சூடு

by Fazlullah Mubarak 10-02-2019 | 8:05 PM

தனமல்வில பகுதியில் இன்று (10) பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று பகல் 12.20 மணியளவில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 45 வயதான சுது ஹதுரு சுமித் எனப்படும் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சென்ற நால்வர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது அருகிலிருந்த 22 வயதான இளைஞரொருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞன், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தனமல்வில பகுதியில், குருசிங்க ஆரச்சிகே நிஹால் எனப்படும் களுவா என்பவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.