வவுனியாவில் சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

வவுனியாவில் காணாமற்போயிருந்த சிறுவன் சடலமாக கிணற்றிலிருந்து மீட்பு 

by Staff Writer 09-02-2019 | 4:08 PM
Colombo (News 1st) வவுனியா - சிதம்பரபுரம், கற்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) முதல் சிறுவன் காணாமற்போயிருந்த நிலையில், இன்று காலை கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனே நேற்று இரவு முதல் காணாமற்போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.