மகாவலி வலயத்தில் சோயா, போஞ்சி செய்கை

மகாவலி வலயத்தின் 6360 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோயா, போஞ்சி செய்கை

by Staff Writer 09-02-2019 | 4:37 PM
Colombo (News 1st) மகாவலி வலயத்தின் 6360 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோயா, போஞ்சி செய்கையை முன்னெடுக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேயருக்கான சோயா, போஞ்சி செய்கைக்காக 318 கிலோகிராம் விதையை இலவசமாக வழங்கியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று, ஒரு ஹெக்டேயருக்கான செய்கைக்கு 4000 ரூபா நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.