நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு:  3876 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 950 பேர் உள்ளிட்ட 3876 பேர் கைது

by Staff Writer 09-02-2019 | 5:11 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 950 பேர் உள்ளிட்ட 3876 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் வாகனம் செலுத்திய 950 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும், ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 1033 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.