31 பேரும் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

கைதின் போது மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரும் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

by Staff Writer 08-02-2019 | 3:59 PM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரும், கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் இரத்த மாதிரியை பரிசோதித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென துபாய் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இராஜாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக குழுவொன்றினை துபாய்க்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள குழுத் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேர் போதைப்பொருளுடன் கடந்த 5 ஆம் திகதி துபாயிலுள்ள ​ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டனர்.