கேரளக்கஞ்சாவுடன் பேலியகொடையில் இருவரும் கொக்கைனுடன் இந்திய பிரஜையும் கைது

by Bella Dalima 08-02-2019 | 4:18 PM
Colombo (News 1st)  40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இருவர் பேலியகொடை பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வேனொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்களைக் கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்த 400 கிலோகிராமிற்கும் அதிக கேரளக்கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, 150 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான கொக்கைனுடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. 34 வயதான இந்திய பிரஜை தனது பயணப்பொதியில் சூட்சுமமாக மறைத்து வைத்து கொக்கைனை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். சந்தேகநபர் மும்பையிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஏனைய செய்திகள்