by Bella Dalima 07-02-2019 | 8:27 PM
Colombo (News 1st) மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர் துபாய் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.
31 பேர் இன்று துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தமக்கு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அறியக்கிடைத்ததென அசாத் சாலி குறிப்பிட்டார்.
அஜித் அரங்க விக்ரமசூரிய என்ற பெயரிலேயே மாகந்துரே மதுஷ் துபாய்க்கு இலங்கையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக அசாத் சாலி மேலும் கூறினார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.