கொள்கலன்களை அகற்ற விசேட பாதுகாப்பு நடவடிக்கை

தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்ற விசேட பாதுகாப்பு நடவடிக்கை

by Staff Writer 07-02-2019 | 7:34 AM
Colombo (News 1st) சுங்கத் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கையைத் துரிதமாக முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்பிலிருந்து அதிகபட்ச ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு எவ்வித கட்டணமும் அதிகரிக்கப்படமாட்டாது என சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. குறித்த கொள்கலன்கள் அகற்றப்படாமையினால் அதற்காக அதிக நிதி செலவிட வேண்டியுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜீ. ராஜேந்திரன் கூறியுள்ளார்.