ATM நிதி மோசடி: வௌிநாட்டவர் மூவர் கைது 

ATM இயந்திரங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வௌிநாட்டவர் மூவர் கைது 

by Staff Writer 06-02-2019 | 5:17 PM
Colombo (News 1st) அரச மற்றும் தனியார் வங்கிகளில் ATM இயந்திரங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சீன பிரஜைகள் இருவரும் ருமேனிய பிரஜை ஒருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.