மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் மீதான மேலதிக விசாரணை

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் மீதான மேலதிக விசாரணைகள்

by Staff Writer 06-02-2019 | 6:54 AM
Colombo (News 1st) துபாயிலிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கோஷ்டித் தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும் அவர்களில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சி பானை இம்றான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா, அவருடைய மகன் மற்றும் நடிகர் ஒருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகதுரே மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்தில் இவர்கள் 25 பேரும் பங்குபற்றியதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்