மலிக் சமரவிக்ரம செயற்பட்ட விதம் குறித்து விவாதம்

சிங்கப்பூர் உடன்படிக்கையின்போது அமைச்சர் மலிக் சமரவிக்ரம செயற்பட்ட விதம் குறித்து விவாதம்

by Staff Writer 06-02-2019 | 1:33 PM
Colombo (News 1st) சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும்போது அமைச்சர் மலிக் சமரவிக்ரம செயற்பட்ட விதம் குறித்து விவாதிப்பதற்கு திகதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள, இன்றைய கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடியது. இதன்போதே, அமைச்சர் மலிக் சமரவிக்ரம செயற்பட்ட விதம் குறித்து விவாதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்