இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 206 கிலோகிராம் கேரளக்கஞ்சா பறிமுதல்

by Staff Writer 06-02-2019 | 7:16 PM
Colombo (News 1st) இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 206 கிலோகிராம் கேரளக்கஞ்சா பறிமுதல் தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 206 கிலோகிராம் கேரளக்கஞ்சா கடந்த 24 மணித்தியாலங்களில் கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உச்சிப்புளி பஸ் நிலையத்தில் வைத்து நேற்றிரவு 10 கிலோகிராம் கேரளக்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளக்கஞ்சா தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், Q-பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, உச்சிப்புளி அரியமான் கடற்கரை பகுதியில் 196 கிலோகிராம் கேரளக்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.