by Chandrasekaram Chandravadani 06-02-2019 | 10:51 AM
Colombo (News 1st) வட கொரிய ஜனாதிபதியுடனான தனது இரண்டாவது அணுவாயுத ஒப்பந்தத்தை இந்த மாதம் முன்னெடுக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை எதிர்வரும் 27 - 28ஆம் திகதி வரை வியட்நாமில் இடம்பெறவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன்னுக்கு இடையிலான முதலாவது அணுவாயுத உடன்படிக்கை, கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.