வெயாங்கொட ஊஞ்சல் விபத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு
by Staff Writer 05-02-2019 | 11:53 AM
Colombo (News 1st) கம்பஹா - வெயாங்கொட - நைவல சிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே 13 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுவர் பூங்காவை நடாத்திச்சென்ற 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வெயாங்கொட நைவல பகுதியில், சிறுவர் பூங்காவிலுள்ள ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் குறித்த சிறுமியின் தாயார் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.