வெயாங்கொட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது

வெயாங்கொடயில் பெண் பலியான சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 05-02-2019 | 7:11 AM
Colombo (News 1st) வெயாங்கொட - நயிவலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் பூங்காவை பராமரித்துவந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெயாங்கொட நயிவலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நேற்று ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் 47 வயதான, கொட்டுகொடவைச் சேர்ந்த பெண் ஒருவதே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த 13 வயதான சிறுமி சிகிச்சைகளுக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.