போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக்க இலங்கை, மாலைத்தீவு ஜனாதிபதிகள் இணக்கம்

by Staff Writer 05-02-2019 | 5:54 PM
Colombo (News 1st) சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் விரிவாகவும் புதிய ஒத்துழைப்புகளுடனும் முன்னெடுக்க இலங்கை மற்றும் மாலைத்தீவு ஜனாதிபதிகள் இணங்கியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையில் இன்று காலை இடம்பெற்ற உத்தியோகப்பூர்வ சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் சுற்றிவளைப்புகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி புகழாரம் சூட்டியதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.