Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து ஒருவாரத்திற்கு இந்தியா செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெஃப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.
எனினும், அதற்கான மருத்துவ பரிந்துரையை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை.
இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.