கட்டடத்தில் பரவிய தீயால் 7 பேர் உயிரிழப்பு

கட்டடத்தில் பரவிய தீயால் 7 பேர் உயிரிழப்பு: பாரிஸில் சம்பவம்

by Chandrasekaram Chandravadani 05-02-2019 | 11:08 AM
Colombo (News 1st) பாரிஸின் தென் மேல் பகுதியில் கட்டடம் ஒன்றில் பரவிய தீயினால், 7 பேர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்ச் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் கூறப்படுகின்றது. குறித்த 8 மாடி கட்டடடத்தின் 7 மற்றும் 8ஆம் மாடிகளில் தொடர்ந்தும் தீ எரிந்துகொண்டிருக்கின்றமையால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என, தீயணைப்பு சேவையின் பேச்சாளர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.