புத்தளத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் தாயார் கைது

புத்தளத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் தாயார் கைது

by Staff Writer 04-02-2019 | 3:04 PM
Colombo (News 1st) புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர், புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியை சேர்ந்த 4 வயதான செனுரி திசாரா சிறுமி, கடந்த 29 ஆம் திகதி காணாமல்போயிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்தபோதிலும், தாயாரினாலேயே சிறுமி கலாஓயாவில் வீசப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.