தேசிய தினத்தில் சுதந்திரமடையும் 545 பேர்

தேசிய தினத்தில் சுதந்திரமடையும் 545 பேர்

by Fazlullah Mubarak 04-02-2019 | 1:49 PM

71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு இன்று 545 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களுள் 4 பெண் கைதிகளும் அடங்குவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார். சிறு குற்றமிழைத்தவர்களுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. மரணதண்டனை உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 31 கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 41 கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார். இதேவேளை, இன்று காலை 9 மணி முதல் கைதிகளைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்றைய தினத்தில் கைதிகளுக்கு உணவு எடுத்துசெல்லவும் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.