காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

காணாமல்போன மாணவி நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

by Staff Writer 04-02-2019 | 5:32 PM
Colombo (News 1st) மஸ்கெலியா - மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா க்ளென்ட்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக குறித்த மாணவி காணாமல்போயுள்ளதாக, குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.