by Staff Writer 04-02-2019 | 5:17 PM
Colombo (News 1st) வெயாங்கொட - நயிவலயில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், குறித்த பெண்ணின் மகள் படுகாயமடைந்துள்ளார்.
மகள் மற்றும் தாய் ஆகியோர் இன்று காலை இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
விபத்தில் 47 வயதான, கொட்டுகொடவைச் சேர்ந்த பெண் ஒருவதே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 13 வயதான குறித்த சிறுமி சிகிச்சைகளுக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.