by Fazlullah Mubarak 03-02-2019 | 10:10 PM
நியூஸ் பெஸ்ட் இரத்தினபுரி செய்தியாளர் ருசிர அபேமான்ன இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி புதிய நகரத்தில் வாகன விபத்து நேர்ந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளராக அவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.