சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்த அறிவித்தல்

சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

by Staff Writer 03-02-2019 | 10:26 AM
Colombo (News 1st) நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்ய குடியவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்புகொள்ள முடியும் என திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பிரதி நிர்வாக அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார். 011-574 99 99 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.