பிளாட்டினம் விருதுகள்: மாத்தளையின் அதிசிறந்த வீராங்கனையாக டில்ஷாரா நெத்மினி தெரிவு

by Staff Writer 02-02-2019 | 8:04 PM
Colombo (News 1st)  ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் - Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் இன்றைய 18 ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்திட்டம் மாத்தளையில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது. மாத்தளை மாவட்ட கல்வி திணைக்கள அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் மற்றும் Allianz நிறுவன அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய நிகழ்வு மாத்தளை விஜய வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு ரக்பி ,கால்பந்தாட்டம் , பேஸ்போல் உள்ளிட்ட விளையாட்டுகளின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மாத்தளை மாவட்டத்தின் அதிசிறந்த பாடசாலை வீர/வீராங்கனைக்கான தங்கப்பதக்கத்தை சங்கமித்தா மகளிர் கல்லூரியின் பளு தூக்கல் வீராங்கனை டில்ஷாரா நெத்மினி சுவீகரித்தார். மக்களின் உற்சாகமான வாழ்த்துகளுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடர் வானகத் தொடரணி மாத்தளையிலிருந்து குருநாகலுக்கான பயணத்தை ஆரம்பித்தது.