இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை

படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை

by Staff Writer 02-02-2019 | 4:52 PM
Colombo (News 1st) படைப்புழுக்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாய காணிகளுக்கான காப்புறுதி அவசியமில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இழப்பீடு வழங்குவதற்கு படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மதிப்பீடு செய்யும் குழுவின் அனுமதி மாத்திரம் போதுமானது என அ​மைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட நிலங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அந்நடவடிக்கைகள் நிறைவு பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் பின்னர் இழப்பீடுகள் வெகு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.