by Staff Writer 02-02-2019 | 4:52 PM
Colombo (News 1st) படைப்புழுக்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாய காணிகளுக்கான காப்புறுதி அவசியமில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இழப்பீடு வழங்குவதற்கு படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மதிப்பீடு செய்யும் குழுவின் அனுமதி மாத்திரம் போதுமானது என அமைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நிலங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அந்நடவடிக்கைகள் நிறைவு பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர் இழப்பீடுகள் வெகு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.