உற்பத்தி துறைசார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை

உற்பத்தி மற்றும் சேவைகள் துறைசார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 02-02-2019 | 4:43 PM
Colombo (News 1st)  உற்பத்தி மற்றும் சேவைகள் துறை சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாரிய திட்டங்கள் தொடர்பிலான தௌிவுபடுத்தலொன்றை, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீர மேற்கொண்டிருந்தார். வெளிநாட்டு நேரடி முதலீடாக 1000 கோடி டொலரை பெற்றுக்கொள்வது அமைச்சின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.