20 மில்லியன் பெறுமதியான சிகரட்களுடன் ஒருவர் கைது

20 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்களுடன் ஒருவர் கைது 

by Staff Writer 01-02-2019 | 3:54 PM
Colombo (News 1st) புறக்கோட்டை , மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சிறிய கொள்கலன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சிகரட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 4 இலட்சம் சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கப்பல்களுக்கான பாகங்களை துபாயிலிருந்து கொண்டு வரும் போர்வையில், சிகரட் அடங்கிய கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.