பிளாட்டினம் விருதுகள்: கண்டி மாவட்டத்தின் அதிசிறந்த வீரராக P.M. ஹர்ஷ சந்தருவன் தெரிவு

by Staff Writer 01-02-2019 | 10:11 PM
Colombo (News 1st) ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் - Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் கண்டி மாவட்டத்திற்கான ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் P.M. ஹர்ஷ சந்தருவன் அதிசிறந்த வீரராக தெரிவானார். அவர் வலல ஏ. ரத்நாயக்க கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் சாதித்த வீரராவார். ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் - Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் இன்றைய 11 ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்திட்டம் கண்டி தர்மராஜ கல்லூரியில் கண்கவரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்டது. கண்டி மாவட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள், Allianz மற்றும் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர். கண்டி மாவட்டத்தின் அதிசிறந்த பாடசாலை வீரருக்கான தங்கப்பதக்கத்தை வலல ஏ. ரத்நாயக்க கல்லூரியின் மெய்வல்லுநர் வீரரான P.M. ஹர்ஷ சந்தருவன் சுவீகரித்தார். இன்றைய நம்பிக்கையின் சுடர் வாகனத் தொடரணி கண்டியிலிருந்து பயணத்தை ஆரம்பித்து மாத்தளையை சென்றடைந்தது.