தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க பிரேரணை சமர்ப்பிப்பு

தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரேரணை சமர்ப்பிப்பு 

by Staff Writer 01-02-2019 | 3:24 PM
Colombo (News 1st) தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற சபாநாயகரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபாநாயகரிடம் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான பிரேரணையொன்று கிடைக்கப்பெற்றதாக உறுதி செய்யப்பட்டது.