by Staff Writer 01-02-2019 | 5:31 PM
Colombo (News 1st) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைகான வௌிநாட்டுத் தூதுவர்கள் 12 பேர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்லோவாகியா, பெலாரஸ், மாலி, கம்போடியா உள்ளிட்ட சில நாடுகளின் தூதுவர்கள் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.
உகண்டா, சைபிரஸ் மற்றும் கயானா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் இன்று கையளித்துள்ளனர்.