இரத்தினபுரியில் 7 தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 01-02-2019 | 8:14 PM
Colombo (News 1st) 1000 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரத்தினபுரி - சூரியகந்த பகுதியில் 7 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரத்தினபுரி - தெனியா பிரதான வீதியை மறித்து சூரியகந்த சந்தியில் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. காலை 8.30 மணியிலிருந்து நண்பகல் 12.30 மணி வரை போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.